போக்குவரத்து விதிகளை மீறியதாக நேற்று (ஜன.3) ஒரே நாளில் நாகர்கோவில் மாநகரில் மட்டும் 107 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
கன்னியாகுமரி, மார்த்தாண்டம், தக்கலை, குளச்சல் உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து விதிகளை மீறியதாக மொத்தம் 374 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. கடந்த 3 நாட்களில் மாவட்டம் முழுவதும் 927 பேர் மீது வழக்குப்பதிவாகி உள்ளது. அனுமதித்த நேரம் மீறி இயங்கிய 2 லாரியை பறிமுதல் செய்தனர்.