கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரி பஸ் நிலையத்தில் பேருந்துகள் வரும் பகுதியில் தடுப்பு சுவர் உடைந்து விழுந்து விட்டதால் அங்கு மரங்கள் ஆபத்தான நிலையில் நிற்கின்றன. எந்த நேரத்திலும் இந்த மரங்கள் பேருந்து நிலையத்திற்குள் விழும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் பயணிகளுக்கும் பேருந்துகளுக்கும் பாதிப்பு ஏற்படும் சூழல் உள்ளது. எனவே தடுப்புச் சுவர் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்துள்ளன.