கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடிவீஸ்வரம் தேரடி வீதியில் சரஸ்வதி பூஜை பண்டிகையை முன்னிட்டு சீசன் கடைகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அங்கு மதுரை , சாத்தூர் போன்ற வெளி மாவட்டங்களைச் சேர்ந்த பொம்மை வியாபாரிகள் கடைகள் அமைத்து விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் பொம்மைகளை வாங்குவதற்காக ஏராளமான பொதுமக்கள் அங்கு குவிந்து கொலு பொம்மைகளை வாங்கி வருகின்றனர்.