கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடிவீஸ்வரத்தில் லட்சுமி நரசிம்மர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் இன்று திருக்கல்யாண விழா நடைபெற இருக்கிறது. இதனைத் தொடர்ந்து நேற்று கோவிலில் நடனமாடி பஜனை பாடி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டு பஜனை பாடி நடனமாடினர். இதனை அங்கு கூடியிருந்த ஏராளமான ஆண்களும் பெண்களும் பார்த்து லட்சுமி நரசிம்மரை வழிபட்டுச் சென்றனர்.