கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகர பகுதிகளில் சாலைகளில் மாடுகள் சுற்றி திரிந்து வருகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகும் நிலை ஏற்படுவது உடன் விபத்துகளும் ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. இதனை தடுத்து நிறுத்துவதற்கு மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.