கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே பெருமாள் மண்டபம் அருகே பைக்கில் வந்த நபர் மீது டெம்போ மோதி விபத்து ஏற்பட்டது. இதில், பலத்த காயம் அடைந்த அவரை பொதுமக்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அந்த நபர் ஆசாரிப்பள்ளத்தை அடுத்த சங்கரன்கோழியை சார்ந்தவர் என்பது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.