கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட 49வது வார்டு பறக்கை செட்டித்தெரு குடியிருப்பு பகுதியில் நேற்று மலைப்பாம்பு குட்டிகள் ஆங்காங்கே சாலையில் இறந்து கிடந்ததால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனர். இறந்து கிடக்கும் மலைப்பாம்புகளை பொதுமக்களே அப்புறப்படுத்தினர். பின்னர் வனத்துறைக்கு தகவல் தெரிவித்து அங்கு பதுங்கி உள்ள பெரிய மலைப்பாம்பை பிடித்து செல்ல அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.