நாகர்கோவிலில் சாலை விதிகளை மீறிய 27 பேருக்கு அபராதம்

53பார்த்தது
குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் உத்தரவின் பேரில் போக்குவரத்து ஒழுங்குபிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் வில்லியம் பெஞ்சமின் தலைமையிலான போலீசார் நேற்று (ஜன.2) ராமன்புதூர் பகுதியில் வாகன சோதனை நடத்தினர். 

அப்போது இருசக்கர வாகனத்தில் ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டுதல், பதிவு எண் இல்லாமல் வாகனம் ஓட்டுதல், அபாயகரமான முறையில் வாகனம் ஓட்டுதல், இருசக்கர வாகனத்தில் 3 நபர்கள் பயணம் செய்தல் ஆகிய விதிமீறல்களில் ஈடுபட்ட 27 பேர் பிடிபட்டனர். பின்னர் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டது. அந்த வகையில் மொத்தம் ரூ. 1 லட்சத்து 36 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. 

அபராதம் தொகை செலுத்திய பின் முறையான பதிவு எண் இல்லாத வாகனங்களுக்கு பதிவு எண் பொருத்தி அனுப்பப்பட்டது. ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகனத்தை ஓட்டி வந்த இளைஞர்களின் பெற்றோர் வரவழைக்கப்பட்டு இளைஞர்கள் மற்றும் பெற்றோருக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டன.

தொடர்புடைய செய்தி