குமரியின் குற்றாலம் என்று அழைக்கப்படும் திற்பரப்பு அருவிக்கு தினந்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். பண்டிகை மற்றும் விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரிக்கும். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் தொடர் மழை பெய்து வருவதால் கோதை ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
இதன் காரணமாக திற்பரப்பு அருவியில் தண்ணீர் அதிக அளவில் கொட்டியதால் சுற்றுலா பயணிகள் நலன் கருதி அருவியல் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முதல் மாவட்டத்தில் மழை குறைந்துள்ளது.
இதனை தொடர்ந்து இன்று காலை முதல் திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். இதை அறிந்ததும் விடுமுறை நாளான இன்று திற்பரப்பு வந்த சுற்றுலா பயணிகள் ஆனந்தமாக அருவியில் குளித்து மகிழ்ந்தனர். போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.