கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வழக்கறிஞர் சங்க தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் புதிதாக பதவியேற்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வாழ்த்துரையாற்றினார். மேலும் சங்கத்தின் புதிய நிர்வாகிகளுக்கு பொன்னாடை போர்த்தி வாழ்த்துகள் கூறினார். இந்த நிகழ்ச்சியில் வழக்கறிஞர்கள் திரளாக கலந்து கொண்டனர்.