குளச்சல் அருகே கோடி முனை, சைமன் காலனியை சேர்ந்தவர் ஜஸ்டின் மனைவி டென்சிலி (61). இவர் நேற்று குளச்சல் அண்ணா சிலை பகுதியில் வசிக்கும் தனது உறவினரை பார்த்து விட்டு ஊருக்கு செல்வதற்காக அண்ணா சிலை பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது குளச்சலில் இருந்து திங்கள் நகர் நோக்கி சென்ற பைக் ஒன்று டென்சிலி மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது.
இதில் படுகாயம் அடைந்த டென்சிலியை அங்கிருந்தவர்கள் மீட்டு குளச்சல் பருதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த விபத்து குறித்து குளச்சல் போலீசார் வழக்கு பதிவு செய்து, மோதி விட்டு நிற்காமல் சென்ற பைக் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.