கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலை சேர்ந்தவர் அமானுல்லா(26). கல்லூரியில் படிக்கும் போது இவரது தம்பிக்கும் ஒருவருக்கும் இடையே முன் விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் அமானுல்லாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வரவழைத்து 9 பேர் கொண்ட கும்பல் கத்தி மற்றும் கம்பியால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து குளச்சல் போலீசார் நேற்று வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.