குலசேகரத்தில் ஜீப்-பைக் மோதல்- சிசிடிவி காட்சிகள் வெளியானது

81பார்த்தது
குலசேகரம் அருகே நாககோடு செம்மண் காலவிளை பகுதியை மீது சேர்ந்தவர் கிறிஸ்துராஜ். ரப்பர் பால் வெட்டும் தொழிலாளி. இந்த நிலையில் கிறிஸ்துராஜ் வேலைக்கு செல்வதற்காக தனது  பைக்கில் குலசேகரம் - மார்த்தாண் டம் சாலையில் நேற்று அதிகாலையில் சென்று கொண்டிருந்தார்.  

     அப்போது கோணத்துவிளாகம் பகுதியை சேர்ந்த கோணி மகன் பினாய் என்பவர்  ஜீப்பில் வேகமாக வந்து கொண்டிருந்தார். அந்த நேரம் ஜீப் எதிர் பாராதவிதமாக கிறிஸ்து ராஜ் ஓட்டி வந்த பைக் மோதியது. இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த கிறிஸ்துராஜை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அங்குள்ள தனியார் மருத்துவமனை சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

       இந்த விபத்து குறித்து கிறிஸ்துராஜின் மனைவி பெல்லா கொடுத்த புகாரின்பேரில் குலசேகரம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்து குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி