கன்னியாகுமரி பகுதியில் சுற்றுலா பயணிகளுக்கு ஒரு வாலிபர் கஞ்சாவை விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் கன்னியாகுமரி போலீசார் கன்னியாகுமரி மெயின் ரோட்டில் கையில் பையுடன் சுற்றித்திரிந்த ஒரு வாலிபரை பிடித்து சோதனை செய்தனர். அதில் 300 கிராம் கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அந்த வாலிபரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் கொட்டாரம் மந்தாரம்புதூரைச் சேர்ந்தவர் பிரகதீஸ்வரன் (வயது21) என்பதும், கன்னியாகுமரி பகுதியில் சுற்றுலா பயணிகளுக்கு கஞ்சா விற்பனை செய்ய முயன்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரிடம் இருந்து 300 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து பிரகதீஸ்வரனை கைது செய்தனர்.