கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி அருகே தாழக்குடி என்ற மணிமேகலை என்பவரது வீட்டின் அருகில் நின்று கொண்டிருந்த 2 ஆடுகள், ஆழ்வார் என்பவர் வீட்டின் அருகில் நின்று கொண்டிருந்த 1 ஆடு என 3 ஆடுகளை இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் நேற்று இரவு திருடிச் சென்றதாக கூறப்படுகிறது. இது குறித்த வீடியோ தற்போது வெளியாகி உள்ளது. ஆடுகளை திருடிய அந்த மர்ம நபர்கள் குறித்து ஆரல்வாய்மொழி போலீசார் விசாரித்து வருகின்றனர்.