ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் உலக சுற்றுலா மையமான கன்னியாகுமரிக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் அதிகாலையில் குவிந்தனர். அவர்கள் கன்னியாகுமரி கடற்கரையில் சூரியன் உதயம் காட்சியை கண்டு களித்தனர். பின்னர் பகவதி அம்மன் கோவில், காமராஜர் மணி மண்டபம் காந்தி மண்டபம் போன்றவைகளுக்கு சென்று பார்வையிட்டனர். இதனால் கன்னியாகுமரியில் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.