லெமூரியா வர்ம களரி அடிமுறை உலக கூட்டமைப்பு சார்பில் தமிழ் வளர்ச்சிக்கான விழிப்புணர்வு பயணம், கன்னியாகுமரி காந்தி மண்டபம் முன்பிருந்து இன்று புறப்பட்டது. இந்த பயணத்தில் கலந்து கொண்டவர்கள் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகள் வழியாக, இம்மாதம் 17ஆம் தேதி சென்னை திருவள்ளுவர் சிலை சென்றடைகின்றனர். வழி நெடுகிலும் இவர்கள் தமிழ் வளர்ச்சிக்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணியில் ஈடுபடுகிறார்கள்.