திராவிடர் கழகம் சார்பாக சமூகநீதி துண்டறிக்கை பரப்புரை.

74பார்த்தது
திராவிடர் கழகம் சார்பாக சமூகநீதி துண்டறிக்கை பரப்புரை.
குமரி மாவட்ட மக்களிடம் சமூகநீதி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கன்னியாகுமரி மாவட்ட திராவிடர் கழகம் சார்பாக சமூகநீதி துண்டறிக்கைப் பரப்புரை செய்யப்பட்டது. பெரியாருடைய சமூகநீதிச் சிந்தனைகள், திராவிடர் கழகம் மக்களுக்கு பெற்றுத்தந்த உரிமைகள், சமூக நீதியின் சின்னம் திராவிடர்கழக தலைவர் கி. வீரமணி அவர்களுடைய உழைப்பால் வந்த மண்டல் குழு பரிந்துரை அமல்படுத்தப்பட்டு அதனால் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு கிடைத்த 27 % இட ஒதுக்கீட்டு உரிமை, தமிழ்நாட்டில் கிடைத்த 69% இட ஒதுக்கீட்டு உரிமை போன்ற வரலாற்றுச் செய்திகள் அடங்கிய துண்டறிக்கைகளை கன்னியாகுமரி பகுதி பொதுமக்களிடம் வழங்கி பரப்புரை செய்தனர். குமரிமாவட்ட திராவிடர்கழகத் தோழர்கள். இந்த பரப்புரை நிகழ்ச்சிக்கு திக குமரி மாவட்டத் தலைவர் மா. மு. சுப்பிரமணியம் தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் கோ. வெற்றிவேந்தன் முன்னிலை வகித்தார். திராவிடர் கழக மாவட்ட மகளிர் பாசறை மாவட்ட தலைவர் மஞ்சு குமார தாஸ், அகஸ்தீஸ்வரம் ஒன்றிய தலைவர் எஸ். குமார தாஸ் திக கன்னியாகுமரி கிளை அமைப்பாளர் க. யுவான்ஸ், உட்பட பலரும் கலந்து கொண்டனர். தந்தை பெரியாருடைய கருத்துக்கள், தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களுடைய கருத்துக்கள் அடங்கிய துண்டறிக்கைகளை பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கி படித்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி