மணக்குடி பாலத்தில் மின்விளக்கு வசதி ஏற்படுத்த கோரிக்கை

79பார்த்தது
கன்னியாகுமரி மாவட்டத்தில் கீழமணக்குடி மற்றும் மேலமணக்குடி கிராமங்களை இணைக்கும் பாலம் உள்ளது. இந்த பாலம் வழியாக வாகன போக்குவரத்து நடைபெற்று வருகிறது. இரவு நேரங்களில் இந்த பாலத்தில் மின்விளக்கு வசதிகள் இல்லாததால் பாலம் இருளில் மூழ்கிக் கிடக்கிறது. இதனால் இந்த பாலம் வழியாக செல்பவர்கள் இருளில் செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே இங்கு மின்விளக்கு வசதி ஏற்படுத்த வேண்டும் என்று கோரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.

தொடர்புடைய செய்தி