குமரி மாவட்டத்தின் பிரசித்திபெற்ற கோவிலான சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் மாதந்தோறும் இரு முறை பிரதோஷ வழிபாடு சிறப்பாக கொண்டாடப்படுது வழக்கம். இந்த மாதம் 1-ந்தேதியான நேற்று பிரதோஷ வழிபாடு தொடங்கியதால் 3 முறை பிரதோஷ வழிபாடு நடைபெற உள்ளது. பிரதோஷ வழிபாட்டை யொட்டி நேற்று தாணுமாலயசாமிக்கு தங்க அங்கி சாத்தப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. அதன்படி மாலை 4 மணியளவில் கோவில் சுற்றுப்பிரகாரத்தில் உள்ளகைலாச நாதர் சன்னதியில் சிறப்பு அபிஷேகங்கள், நந்தி பகவானுக்கு சிறப்பு தீபாரதனை, 6. 30 மணிக்கு கோவிலில் நடைபெறும் நித்திய காரிய பூஜைகள் முடிந்த பிறகு கோவில் சுற்று பிரகாரங்களில் உள்ள அகல் விளக்குகள் அனைத்தும் ஏற்றப்பட்டு ரிஷப வாகனத்தில் சிவனும், கருட வாகனத்தில் பெருமாளும் அமரச்செய்து வாகனங்களின் முன்பு பசு மற்றும் கன்று முன் செல்ல கயிலை வாத்தியங்களை இசைக்க 3 முறை ஸ்ரீபலி வழிபாடு நடந்தது. ஸ்ரீபலி வழிபாடு முடிந்த பின் தாணு மாலயசாமிக்கு அலங்கார தீபாராதனை, பக்தர்களுக்கு அருள் பிரசாதம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை தாணுமாலய தொண்டர் அறக்கட்டளையின திருக்கோவில் நிர்வாகமும் இணைந்து செய்திருந்தது.