கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் மாசிமகம் பௌர்ணமி விழா இன்று(மார்ச். 13) நடந்தது. இதையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. அதன் பிறகு தங்க ஆபரணங்கள் மற்றும் வைரக்கிரீடம், வைரக்கல் மூக்குத்தி அணிவிக்கப்பட்டு, சந்தன காப்பு அலங்காரத்துடன் சிறப்பு தீபாராதனை நடந்தது. அதன் பிறகு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.