பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ. வ. வேலு நேற்று (டிச.27) இரவு கன்னியாகுமரி நடுகடலில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலையிலிருந்து, விவேகானந்தர் நினைவு மண்டபம் வரை நடைபெற்று வரும் கண்ணாடி இழை தரைத்தள பாலப்பணிகளை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இதில் மாவட்ட ஆட்சியர் அழகுமீனா உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.