கன்னியாகுமரியில் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை கடற்கரை பகுதியில் அமைந்துள்ள சுனாமி நினைவு சின்னத்தில் 20வது ஆண்டு நினைவு தினமான இன்று (டிச. 26) அமைச்சர் தங்கம் தென்னரசு கலெக்டர் அழகு மீனா போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம், எம். ஆர். காந்தி எம். எல். ஏ, மேயர். மகேஷ் உள்பட பலர் அஞ்சலி செலுத்தினர்.