பூதப்பாண்டி அருகே லாட்டரி சீட்டு விற்றவர் கைது

81பார்த்தது
பூதப்பாண்டி அருகே லாட்டரி சீட்டு விற்றவர் கைது
கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி அருகே இறச்சகுளம் சந்திப்பு பகுதியில் லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக பூதப்பாண்டி போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துராஜ் தலைமையிலான போலீசார் விரைந்து சென்று அங்கு சந்தேகப்படும் வகையில் மோட்டார் சைக்கிளுடன் நின்ற ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர்.

அதில் அவர் தடிக்காரன்கோணம் அருகே உள்ள பால்குளம் பகுதியை சேர்ந்த பர்ஷா (வயது 47) என்பதும், அங்கு லாட்டரி சீட்டு விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் இருந்து 50 லாட்டரி சீட்டுகள் மற்றும் - விற்பனை செய்த ரூ. 20 ஆயிரம், இருசக்கர வாகனம், செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்து பர்ஷாவை கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி