கன்னியாகுமரியில் இன்று வெளிநாடு வாழ் தமிழ் மாணவர்களை அயலகவாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் நாசர் வரவேற்றார். ஜனவரி 12 அயலக தமிழர்கள் தினம் சென்னையில் கொண்டாடப்படுகிறது. இதில் தமிழ் அறிஞர்கள் கலந்து கொள்கின்றனர். 156 நாடுகளில் இருந்து மாணவர்கள் வரவழைக்கப்பட்டுள்ளதாகவும் இவர்களின் பயண செலவை அரசே ஏற்றுக் கொண்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.