கன்னியாகுமரி சிலுவை நகர் பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் எட்வர்ட் பிரைட் ரோந்து சுற்றி வந்தபோது சந்திரமோகன் என்பவர் டாஸ்மாக் கடை அருகில் தண்ணீர், தண்ணீர் கப், தின்பண்டங்கள் வைத்து விற்றதைத் தொடர்ந்து அவர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இதேபோல் கண்ணன் என்பவர் மீதும் போலீசார் இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.