கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தை தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் படகில் சென்று பார்வையிட்டு வருகின்றனர். இந்த மண்டபத்தை பார்வையிட செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு வசதியாக அரசு நிறுவனமான பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் படகு போக்குவரத்தை நடத்தி வருகிறது. கடந்த ஒரு ஆண்டில் மட்டும் 20 லட்சத்து 13 ஆயிரத்து 211 பேர் விவேகானந்தர் மண்டபத்துக்கு படகில் பயணம் செய்துள்ளனர்.