கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆரோக்கியபுரம் முதல் நீடோடி வரையிலான கடலோரப் பகுதிகளில் 12 முதல் 15 வினாடிகளுக்கு ஒருமுறை அலைகள் கரைப்பகுதிக்கு வர வாய்ப்பு உள்ளது. இன்று(மார்ச் 19) மாலை 3. 30 மணி வரை இந்த நிலை நீடிக்கும் என்றும் கடல் சார் ஆய்வு மையம் நேற்று வெளியிட்ட பதிவில் கூறியுள்ளது. ஆகவே கடற்கரையோர பகுதிகளில் வசிப்பவர்கள் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.