குமரியில் குழந்தை திருமணம்; போலீசார் விசாரணை

79பார்த்தது
குமரியில் குழந்தை திருமணம்; போலீசார் விசாரணை
கன்னியாகுமரி மாவட்டம் புத்தளம் பகுதியைச் சேர்ந்த கட்டிடத் தொழிலாளி ஒருவர் திசையன்விளை பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியை 4 மாதங்களுக்கு முன் திருமணம் செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்து கன்னியாகுமரி அனைத்து மகளிர் போலீசார் அந்த தொழிலாளியைப் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். சிறுமியை மருத்துவ பரிசோதனை செய்த போது அவர் மூன்று மாத கர்ப்பமாக இருக்கிறார். அவருக்கு 18 வயது பூர்த்தி அடையாததால் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

தொடர்புடைய செய்தி