குமரியில் தொழிலாளியை தாக்கிய 2 பேர் மீது வழக்கு

1569பார்த்தது
நாகர்கோவில் கிருஷ்ணன் கோவில் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 39), தொழிலாளி. இவருடைய மனைவி உதய ராணி. சம்பவத்தன்று கணவன், மனைவி இருவரும் கிருஷ்ணன்கோவில் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது அங்கு அதே பகுதியை சேர்ந்த விஜய் (25) உள்பட 2 பேர் சேர்ந்து உதயராணியை கிண்டல் செய்ததாக தெரிகிறது. இதனை மணிகண்டன் தட்டி கேட்டுள்ளார். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த விஜய் உள்பட 2 பேரும் சேர்ந்து மணிகண்டனை தாக்கி கொலை மிரட்டல் விடுத்து சென்றனர். இது குறித்த புகாரின் பேரில் வடசேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தொடர்புடைய செய்தி