பூதப்பாண்டி அருகே மூதாட்டி விஷம் குடித்து தற்கொலை

1பார்த்தது
பூதப்பாண்டி அருகே மூதாட்டி விஷம் குடித்து தற்கொலை
கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி அருகே உள்ள துவரங்காடு கீழத்தெருபகுதியை சேர்ந்தவர் தங்கப்பன் நாயர். இவரது மனைவி கோமதி (வயது 74) இவர் உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். இதனால் அவர் கடந்த சில நாட்களாக மனமுடைந்த நிலையில் காணப்பட்டு வந்தார். இந்த நிலையில் நேற்று காலையில் கோமதி வீட்டில் விஷம் குடித்து விட்டு வாந்தி எடுத்த நிலையில் கிடந்தார். இதை கண்ட குடும்பத்தினர் உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி கோமதி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் பூதப்பாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தொடர்புடைய செய்தி