இளம் சிறார் பாதுகாப்பு சட்டத்தில் 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு போதைப் பொருள் விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கும் வகையில் சட்டம் உள்ளது. போதைப் பொருள் விற்பனை செய்யும் கடைக்காரர்கள் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுந்தரவதனம் நேற்று (அக்.,5) தெரிவித்துள்ளார்.