கன்னியாகுமரி மாவட்டம் சாமிதோப்பு பகுதியில் நேற்று இரவு சுமார் 10 மணி அளவில் ஒருவர் கத்திக்குத்து காயங்களுடன் இறந்து கிடந்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த தென் தாமரைகுளம் போலீசார் அங்கு விரைந்து சென்று இறந்தவரின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். அடையாளம் தெரியாத நபர் மர்ம நபரால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.