சென்னை, கீழ்ப்பாக்கத்தைச் சேர்ந்த அரங்கேசன் மனைவி துர்கா, 28. இவர், இரண்டு மாதங்களுக்கு முன், குண்டவாக்கத்தில் உள்ள தன் தாய் வீட்டிற்கு வந்தார். கடந்த 13ம் தேதி இரவு, துர்கா வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது பாம்பு கடித்துள்ளது. பின், செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த துர்கா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். உத்திரமேரூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர். உத்திரமேரூரில் பாம்பு கடித்து பெண் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.