உத்திரமேரூரில் பழமையான அந்தோனியார் கோவில் தேர் திருவிழா. ஐந்து தேர்களில் சுவாமிகள் வீதி உலா, நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டு வழிபாடு செய்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் பேரூராட்சிக்கு உட்பட மல்லிகாபுரம் கிராமத்தில் மிகவும் பழமையான புனித அந்தோனியார் ஆலயம் உள்ளது.
இந்த ஆலயத்தில் 87வது ஆண்டு திருவிழாவானது கடந்த ஒன்றாம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. அதிலிருந்து தினமும் சிறப்பு திருப்பலி, தேர் பவனி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தது.
அதன் முக்கிய நிகழ்வான இன்று அலங்கரிக்கப்பட்ட தேர் மற்றும் சப்பரங்களில் புனித அந்தோணியார், புனித சூசையப்பர், புனித ஆரோக்கிய அன்னை, புனித சம்மனசு, திரு இருதய ஆண்டவர் ஆகியோரை தாங்கிய தேர் பவனி நடைபெற்றது.
இதில் உத்திரமேரூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களை சேர்ந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு புனித அந்தோனியாரை வழிபட்டனர். இதனைத் தொடர்ந்து அன்னதானங்களும் வழங்கப்பட்டது.
அந்த ஆலயத்தின் பங்கு தந்தை வினோத் ராஜ் தலைமையில் சிறப்புக் கூட்டு திருப்பதிபலி மற்றும் வானவேடிக்கை நடைபெற்றது.