மதுாரில் நிழற்குடையின்றி பயணியர் அவதி

54பார்த்தது
மதுாரில் நிழற்குடையின்றி பயணியர் அவதி
உத்திரமேரூர் ஒன்றியம், திருமுக்கூடல்- - சாலவாக்கம் சாலையில், மதுார் கூட்டுச்சாலை உள்ளது.


மதுார், அருங்குன்றம், சித்தாலப்பாக்கம், சிறுமையிலூர் உள்ளிட்ட கிராமத்தினர் இங்குள்ள பேருந்து நிறுத்தத்திற்கு வந்து, பேருந்து பிடித்து, காஞ்சிபுரம், வாலாஜாபாத், செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்கின்றனர்.

இப்பேருந்து நிறுத்தத்தில் இருந்த சிறிய அளவிலான பயணியர் நிழற்குடை, பழுதடைந்து சில மாதங்களுக்கு முன் இடிந்தது.

அதையடுத்து, இதுவரை பயணியர் நிழற்குடை வசதி ஏற்படுத்தாமல் உள்ளது.

இதனால், இப்பேருந்து நிறுத்தத்தில், பேருந்துக்கு காத்திருக்கும் பயணியர், மழை மற்றும் வெயில் நேரங்களில் அவதிப்படுகின்றனர்.

மேலும், சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த பெண் தொழிலாளர்கள், இரவு நேரங்களில் பணி முடித்து இப்பேருந்து நிறுத்தத்திற்கு வந்து, அங்கிருந்து பல பகுதிகளுக்கு செல்கின்றனர்.

மதுார் கூட்டுச்சாலை பகுதியில் இதுவரை மின்வசதி இல்லாததால், இருள் சூழ்ந்து, பெண் தொழிலாளர்கள் அச்சத்திற்கு உள்ளாகின்றனர்.

எனவே, இப்பேருந்து நிறுத்தத்தில் புதிதாக பயணியர் நிழற்குடை கட்டடம் மற்றும் மின் வசதி ஏற்படுத்த பயணியர் உள்ளிட்ட பல தரப்பினரும் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி