ஸ்ரீ சீனிவாச பெருமாள் கோவில் ஆனி மாத உற்சவம்

69பார்த்தது
ஸ்ரீ சீனிவாச பெருமாள் கோவில் ஆனி மாத உற்சவம்
வாலாஜாபாத் ஒன்றியம், வரதாபுரம் கிராமத்தில் பழமையான ஸ்ரீஆஞ்சநேய சுவாமி சீனிவாச பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில், ஆண்டுதோறும் ஆனி மாதம் உற்சவ விழா நடப்பது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டுக்கான விழா நேற்று நடந்தது. விழாவின் துவக்க நிகழ்ச்சியாக காலை 7: 00 மணிக்கு கருட வாகனத்தில் எழுந்தருளிய சுவாமி அப்பகுதி முக்கிய வீதிகளில் ஊர்வலமாக வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். அப்போது, வீடுகள்தோறும் பக்தர்கள் தேங்காய் உடைத்து தீபம் ஏற்றி வழிபட்டனர். அதை தொடர்ந்து, காலை 11: 00 மணிக்கு சுவாமிக்கு திருமஞ்சனம் மற்றும் ஊஞ்சல் சேவை நிகழ்ச்சி நடந்தது. அப்போது மலர் அலங்காரத்தில் அருள்பாளித்த ஆஞ்சநேய சுவாமி சீனிவாச பெருமாளுக்கு பல்வேறு சிறப்பு பூஜைகள், அபிஷேக ஆராதனை நடந்தது. இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் இதில் பங்கேற்று வழிபாடு மேற்கொண்டனர்.

வரதாபுரம் ஆஞ்சநேயர் சுவாமி சீனிவாச பெருமாள் கோவில் ஆனி உற்சவ விழாவில் சுவாமிக்கு திருமஞ்சனத்தின் போது தீபாராதனை நடந்தது.

வரதாபுரம் ஆஞ்சநேயர் சுவாமி சீனிவாச பெருமாள் கோவிலில் ஆனி உற்சவ விழாவையொட்டி ஊஞ்சல் சேவையும் நடைபெற்றது.

தொடர்புடைய செய்தி