காஞ்சிபுரம், பிள்ளையார்பாளையம் பகுதியில் உள்ள சேர்மன் சாமிநாதன் தெருவைச் சேர்ந்தவர் குமரேசன், (42). இவர், கிருஷ்ணன் தெருவில், 'பேன்சி ஸ்டோர்' கடை நடத்தி வருகிறார். இவருடைய வியாபாரம், சொத்து தொடர்பாக சிலர் மறைமுகமாக மிரட்டி வரும் நிலையில், ஒரு வாரம் முன், இவருடைய மனைவி பெயரில் உள்ள, 'மாருதி ஸ்விப்ட் டிசைர்' காரின் கண்ணாடியை சிலர் நள்ளிரவு கற்களை கொண்டு உடைத்துள்ளனர். ஏற்கனவே இவரை சிலர் மிரட்டும் நிலையில், கார் கண்ணாடியையும் மர்ம நபர்கள் உடைத்திருப்பதுள்ளனர். இதுதொடர்பாக, குமரேசன் மனைவி யசோதா, சிவகாஞ்சி போலீசில் புகார் அளித்துள்ளார். கார் கண்ணாடியை உடைத்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.