செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் ஒன்றியம், பெரும்பாக்கம் ஊராட்சியில் தமிழ்நாடு அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு விழா நிகழ்ச்சி ஒன்றிய விவசாய அணி அமைப்பாளர் நந்தகோபால் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக அச்சரப்பாக்கம் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் ஜி. தம்பு அவர்கள் கலந்து கொண்டு தமிழ்நாடு அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திறந்து வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் திமுக நிர்வாகிகள், பொதுமக்கள், விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.