செங்கல்பட்டு அடுத்த, மாமண்டூர் ஊராட்சியில், மாமண்டூரில் தமிழ்நாடு அரசு பொது நூலகத் துறையின் கீழ், கிளை நூலகம் இயங்கி வருகிறது. இந்த கட்டடம் இடிந்து விழும் நிலையில் இருந்ததால், புதிய கட்டடம் கட்டித்தர வேண்டும் என, நூலகத் துறையிடம் கிராமவாசிகள் கோரிக்கை விடுத்தனர். அதன் பின், நூலகத்திற்கு புதிய கட்டடம் கட்ட, 22 லட்சம் ரூபாய் நிதியை, நூலகத் துறையினர் ஒதுக்கினர். இப்பணிக்கு, 'டெண்டர்' விடப்பட்டு, தனியார் ஒப்பந்ததாரர்கள் பணி துவக்கி, கடந்த சில மாதங்களுக்கு முன், அனைத்து பணிகளும் நிறைவடைந்துள்ளன. எனவே, கிராமவாசிகள், இளைஞர்கள் ஆகியோர் நலன் கருதி, புதிய கட்டடத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர, நூலகத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வலியுறுத்தி வருகின்றனர்.