காஞ்சிபுரத்தில் துார்ந்த கால்வாய் சீரமைப்பது எப்போது?

82பார்த்தது
காஞ்சிபுரத்தில் துார்ந்த கால்வாய் சீரமைப்பது எப்போது?
காஞ்சிபுரம் மாநகராட்சி 45வது வார்டு, வேளிங்கபட்டரை பாரதியார் தெருவில், மழைநீர் மற்றும் வீட்டு கழிவுநீர் வெளியேறும் வகையில், சாலையோரம் வடிகால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. இக்கால்வாயை மாநகராட்சி நிர்வாகம் முறையாக பராமரிக்காததால், மண் திட்டுகளால் அடைப்பு ஏற்பட்டுள்ளது. 

கழிவுநீர் வெளியேறாமல் ஒரே இடத்தில் தேங்கியுள்ளதால், கொசுக்கள் உற்பத்தியாகும் இடமாக மாறியுள்ளது. மேலும், மழைநீருடன், கழிவுநீர் கலந்து சாலையில் வழிந்தோடுகிறது. எனவே, கால்வாயை துர்வாரி சீரமைக்க, மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பாரதியார் தெருவினர் வலியுறுத்தியுள்ளனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி