ஒரகடம் மேம்பால சாலை சேதம்.. தொடரும் போக்குவரத்து நெரிசல்

63பார்த்தது
ஒரகடம் மேம்பால சாலை சேதம்.. தொடரும் போக்குவரத்து நெரிசல்
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாதில் இருந்து, ஒரகடம், படப்பை வழியாக வண்டலுார் செல்லும், 47 கி. மீ, மாநில நெடுஞ்சாலை உள்ளது. இச்சாலை வழியாக காஞ்சிபுரம், வாலாஜாபாத் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து செல்லும் வாகன ஓட்டிகள் ஒரகடம், படப்பை, வண்டலுார், தாம்பரம் வழியாக சென்னைக்கு சென்று வருகின்றனர். மேலும், ஒரகடம் சுற்றியுள்ள தனியார் தொழிற்சாலைகளுக்கு செல்லும் கனரக வாகனங்கள் மற்றும் தொழிற்சாலை பேருந்துகள் இச்சாலை வழியாக செல்கின்றன.
தமிழ்நாடு சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டு கழகம் சார்பில், இருவழி பாதையாக இருந்த இச்சாலை, நான்குவழிச் சாலையாக விரிவுபடுத்தப்பட்டது.
இதில், 620 மீட்டர் துாரத்திற்கு ஒரகடம் சந்திப்பில், 22 கோடி ரூபாய் செலவில், 10 ஆண்டுகளுக்கு முன் மேம்பாலம் கட்டி முடிக்கப்பட்டது.
வாலாஜாபாத்--வண்டலுார் இடையே உள்ள நான்குவழிச் சாலையை, ஆறுவழிச் சாலையாக 175. 69 கோடி ரூபாய் செலவில் விரிவுபடுத்தும் பணி நடந்து வருகிறது.
மேம்பாலத்தின் மீது ஒட்டை ஏற்பட்ட பகுதி முழுதும், ‛கிரவுன்டிங்' முறையில் பலப்படுத்தும் பணி நடந்து வருகிறது.
இந்த நிலையில், தடையை மீறி வாலாஜாபாதில் இருந்து ஜல்லி கற்களை ஏற்றிக்கொண்டு, தினமும் ஏராளமான லாரிகள் படப்பை வழியே, வண்டலுார், தாம்பரம், சென்னை சுற்றுவட்டார பகுதிகளுக்கு சென்று வருகின்றன. இதனால், படப்பை பகுதியில் மேலும் நெரிசல் அதிகரித்து, வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி