கிறிஸ்மஸ் விடுமுறை மற்றும் அரையாண்டு விடுமுறையை முன்னிட்டு வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்திற்கு படையெடுக்கும் மக்களால் கலை கட்சி காணப்படும் வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம்!
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உலகப் புகழ்பெற்ற வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் உள்ளது. இந்த பறவைகள் சரணாலயத்திற்கு இலங்கை, பாகிஸ்தான் , பர்மா ,
இந்தோனேஷியா சைபிரியா கனடா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து இறைக்காகவும் இனப்பெருக்கத்திற்காகவும் வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்திற்கு வருகை தரும் இந்த சரணாலயம் நவம்பர் மாதம் தொடங்கி அடுத்த ஆண்டு ஏப்ரல் மே மாதம் வரை சீசன் இருப்பது வழக்கம் இந்த நிலையில் தொடர் மழையின் காரணமாக ஏரி முழு கொள்ளளவை எட்டி வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தில் தற்பொழுது 30000 திற்கும் மேற்பட்ட வெளிநாட்டு பறவைகள் உள்ளது.
தற்போது கிறிஸ்மஸ் விடுமுறை மற்றும் அரையாண்டு விடுமுறை என்பதால் சென்னை காஞ்சிபுரம் செங்கல்பட்டு பாண்டிச்சேரி விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தந்து இயற்கைகளுடன் கூடிய பறவைகளை பார்வையாளர்கள் விடுமுறையை சிறப்பான முறையில் இயற்கைகளுடன் பார்த்து ரசிக்கின்றனர்.