மானிய விலையில் தென்னங்கன்று வழங்கல்

60பார்த்தது
மானிய விலையில் தென்னங்கன்று வழங்கல்
திருப்போரூர் வட்டார தோட்டக்கலைத்துறை சார்பில், அருங்குன்றம் ஊராட்சியில் மானிய விலையில் பழக்கன்றுகள், தென்னங்கன்றுகள் வழங்கும் விழா நேற்று நடந்தது.

இதில், அருங்குன்றம் ஊராட்சி தலைவர் அன்பரசு, தோட்டக்கலை உதவி அலுவலர் கோபிநாத், துணை அலுவலர் நடராஜன் பங்கேற்று, 2023- - 24-ம் ஆண்டு கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ், 300 பயனாளிகளுக்கு மானிய விலையில், தலா ஐந்து வகையான பழக்கன்றுகள், இரண்டு தென்னங்கன்றுகளை வழங்கினார்.


இதுகுறித்து தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் கூறியதாவது:

எலுமிச்சை, கொய்யா உள்ளிட்ட ஐந்து வகையான பழ மரக்கன்றுகள், இரண்டு தென்னங்கன்றுகள் வழங்கப்பட்டன.

இதில், ஐந்து வகையான பழ மரக்கன்றுகளின் விலை 200 ரூபாய். ஆனால், மானிய விலையில் 50 ரூபாய்க்கு பயனாளிகளுக்கு வழங்கப்பட்டன. தென்னங்கன்றுகள் முழு மானிய விலையில் வழங்கப்பட்டன.

இவ்வாறு அவர் கூறினர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி