செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுபாக்கம் வட்டார தூய்மைப் பணியாளர்களுக்கு திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் துாய்மைப் பணிக்கான உபகரணங்கள் வழங்கப்பட்டன. அச்சிறுபாக்கம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தின்கீழ் 59 ஊராட்சிகள் உள்ளன.
இந்த ஊராட்சிகளில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்களுக்கு 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான உபகரணங்கள் வழங்கப்பட்டன. அச்சிறுபாக்கம் ஒன்றியக் குழுத் தலைவர் கண்ணன் தூய்மைப் பணியாளர்களுக்கு உபகரணங்களை வழங்கினார்.