கூடுவாஞ்சேரியில் உள்ள பிரதான சாலையில் மரண குழிகள்

82பார்த்தது
கூடுவாஞ்சேரியில் உள்ள பிரதான சாலையில் மரண குழிகள்
செங்கல்பட்டு மாவட்டம்
கூடுவாஞ்சேரியில் இருந்து நெல்லிக்குப்பம் செல்லும் பிரதான சாலையில், பல இடங்களில் வாகன ஓட்டிகளை விபத்துக்குள்ளாக்கும் மரண குழிகள் உள்ளன. இவற்றை உடனே சீரமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செங்கல்பட்டு மாவட்டம், கூடுவாஞ்சேரியிலிருந்து நெல்லிக்குப்பம் வரையிலான 11 கி. மீ. , துார சாலையில், ஒரு மணி நேரத்திற்கு 1, 000க்கும் மேற்பட்ட வாகனங்கள் பயணிக்கின்றன. பெருமாட்டுநல்லுாரிலிருந்து கூடுவாஞ்சேரி நகராட்சிக்கு குடிநீர் விநியோகிக்கும் குழாய், இந்த சாலையின் அடிப்பகுதி வழியாக செல்கிறது.

சில மாதங்களுக்கு முன், இந்த குடிநீர் குழாயில் ஆங்காங்கே வெடிப்பு ஏற்பட்டு, சாலையின் பல இடங்களில் நீர் கசிந்து வெளியேறியது. அதனால், சாலையில் சிறிய பள்ளங்கள் உருவாகின. பின், தொடர் வாகன போக்குவரத்தால், அவை மரண குழிகளாக மாறி, தற்போது வாகன ஓட்டிகளை விபத்திற்கு ஆளாக்கி வருகின்றன.

தொடர்புடைய செய்தி