செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் அருகே பாமக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
செங்கல்பட்டு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் வன்னியர்களுக்கு 10. 5 % இட ஒதுக்கீடு வழங்காத தமிழக அரசை கண்டித்து பழைய பேருந்து நிலையம் அருகே பாட்டாளி மக்கள் கட்சியின் வன்னியர் சங்க மாநில செயலாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான திருக்கச்சூர்
கி. ஆறுமுகம் திறமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
இந்த நிகழும் மாவட்ட செயலாளர் காயார் ஏழுமலை முன்னிலை வகித்தார்
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் 500க்கும் மேற்பட்ட பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டு வன்னியர்களுக்கு 10. 5 % இட ஒதுக்கீடு வழங்கப்படும் என தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் தெரிவித்து இருந்தார் இந்த இட ஒதுக்கிடர்க்கு எந்த ஒரு சிக்கலும் இல்லை எனவே தமிழக அரசு உடனடியாக வன்னியர்களுக்கு 10. 5% இட ஒதுக்கிடை வழங்க வேண்டும் என கோஷங்களை எழுப்பினர்.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் செங்கல்பட்டு மற்றும் மதன் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த ஏராளமான பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகிகள் மற்றும் வன்னியர் சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.