உத்திரமேரூரில் மழைநீர் வடிகால்வாயில் குப்பை கொட்டி எரிப்பு

65பார்த்தது
உத்திரமேரூரில் மழைநீர் வடிகால்வாயில் குப்பை கொட்டி எரிப்பு
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஒன்றியம், திருப்புலிவனம் கிராமத்தில், 300க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் மற்றும் மழைநீர் தெருக்களிலே தேங்கி வந்தது. இதை தவிர்க்க, 10 ஆண்டுக்கு முன் மழைநீர் வடிகால்வாய் அமைக்கப்பட்டு, பயன்பாட்டில் இருந்து வருகிறது. தற்போது, திருப்புலிவனம் பிராமணர் தெருவில் உள்ள, மழைநீர் வடிகால்வாய் முறையான பராமரிப்பு இல்லாமல் உள்ளது. அப்பகுதி வாசிகள் கால்வாயில் குப்பையை கொட்டி எரித்து வருகின்றனர். 

இதனால் கால்வாய் முழுதும் குப்பை கழிவால் நிரம்பி உள்ளது. மழைநீர் வடிகால்வாயில் குப்பை கொட்டுவதை தடுக்க, ஊராட்சி நிர்வாகம் எந்த நடவடிக்கை எடுக்காமல் உள்ளது. எனவே, மழைநீர் வடிகால்வாயில் குப்பை கொட்டி எரிப்பதை தடுக்க, துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி