கிளாம்பாக்கத்தில் காலநிலை அறிவுசார் பூங்கா

70பார்த்தது
கிளாம்பாக்கத்தில் காலநிலை அறிவுசார் பூங்கா
வண்டலுார் அடுத்த கிளாம்பாக்கத்தில், புதிய பேருந்து நிலையத்தை ஒட்டி தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள நிலத்தில், நாட்டின் முதலாவது கால நிலை, அறிவுசார் பூங்கா தயாராகி வருகிறது' என, சி. எம். டி. ஏ. , அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

சென்னையில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வாக, வண்டலுார் அடுத்த கிளாம்பாக்கத்தில், 40 ஏக்கர் பரப்பளவில், 400 கோடி ரூபாய் மதிப்பீட்டில், புதிய புறநகர் பேருந்து நிலையம் கட்டப்பட்டது.

இந்த வளாகம், 2023 டிச. , 30ம் தேதி திறக்கப்பட்டது.

இந்த வளாகத்தை ஒட்டி பாரம்பரிய சின்னங்கள் உள்ள பகுதி, தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கு, கட்டுமான பணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், இப்பகுதி பேருந்து நிலைய திட்டத்தில் இருந்து விடுவிக்கப்பட்டது.

இந்நிலையில், இப்பகுதியை பூங்காவாக மேம்படுத்த, சி. எம். டி. ஏ. , திட்டமிட்டது. தொல்லியல் துறை விதிகளுக்கு உட்பட்டு, இதற்கான திட்டம் உருவாக்கப்பட்டது.

இதன்படி, இங்கு பாரம்பரிய சின்னங்களுக்கு பாதிப்பு இல்லாமல் கால நிலை அறிவுசார் பூங்கா அமைக்க, சி. எம். டி. ஏ. , முடிவு செய்தது. இந்திய தொல்லியல் துறையான ஏ. எஸ். ஐ. , அமைப்பு, பல்வேறு நிபந்தனைகள் அடிப்படையில் இதற்கு அனுமதி வழங்கி உள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி