திருப்போரூரில் ஒரே இரவில் 3 கடைகளில் பூட்டை உடைத்து திருட்டு

85பார்த்தது
திருப்போரூரில் ஒரே இரவில் 3 கடைகளில் பூட்டை உடைத்து திருட்டு
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அடுத்த கொட்டமேடு நான்கு முனை சந்திப்பு அருகே மணிஷ், 34, பன்னீர்செல்வம், 33, ஆகியோர் மொபைல்போன் கடையும், ராமசாமி, 65, என்பவர் மளிகை கடையும் நடத்தி வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு 10:00 மணியளவில், வழக்கம்போல் வியாபாரத்தை முடித்து, கடையை பூட்டிக் கொண்டு, கடைகளின் உரிமையாளர்கள் வீட்டிற்கு சென்றனர். நேற்று காலை கடைகளைத் திறக்க வந்தபோது, மூவரது கடைகளின் பூட்டும் உடைக்கப்பட்டு இருந்தது. இதில், மணீஷ் கடையில் 10,000 ரூபாய் மதிப்புள்ள, வாடிகையாளர் பழுது பார்க்க கொடுத்த மொபைல்போன்கள் உட்பட 9 மொபைல் போன்கள், பன்னீர்செல்வம் கடையில், 1,000 ரூபாய் மதிப்புள்ள, 'ஹெட்செட்' மற்றும் ராமசாமி மளிகை கடையில் 4,000 ரூபாய் பணத்தையும் மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரிந்தது. இதுகுறித்த புகாரின்படி, திருப்போரூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

தொடர்புடைய செய்தி